2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 'மதரசா' ஆசிரியர் அதிரடியாக கைது!

கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமிய பள்ளியில் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-02-10 00:30 GMT

கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமிய பள்ளியில் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே குண்டட்கா என்ற கிராமம் உள்ளது. அங்கு இஸ்லாமியர்கள் படிக்கும் மதரசா உள்ளது. அங்கு ஆசிரியர் உஸ்தாத் சிராஜுதீன் மதானி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பள்ளிக்கு வந்த இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றிய சம்பவம் பெற்றோர்களுக்கு தெரியவரவே அவர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து மதரசா ஆசிரியர் மதானியை கைது செய்து சிறையில அடைத்தனர். பள்ளிக்கு வருகை புரிந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தால் இஸ்லாமிய பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் பலர் தயங்கும் நிலை உருவாகியுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy:Destination Sarajevo

Tags:    

Similar News