கொரோனாவுக்கு மேலும் 2 தடுப்பூசிகள் நடைமுறைக்கு வரும்.. நிதியமைச்சர் தகவல்.!

கொரோனாவுக்கு மேலும் 2 தடுப்பூசிகள் நடைமுறைக்கு வரும்.. நிதியமைச்சர் தகவல்.!

Update: 2021-02-01 11:35 GMT

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் கோவெக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளை இந்தியா உருவாக்கியது.

இதனையடுத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முன்களப்பணியாளர் மற்றும் முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 தடுப்பூசிகள் நடைமுறைக்கும் வரும். இதனால் அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
 

Similar News