'36 ஆயிரம் கோவில்களை முகலாயர்கள் அழித்துள்ளனர்' - சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் பேச்சு

கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, 'ஒருநாள் இந்தியாவின் தேசியக்கொடி காவிக்கொடி ஆக மாறும் செங்கோட்டையில் காவி கொடி ஏற்றப்படும்' என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் தற்போது இவர் ஒரு கருத்தை கூறியுள்ளார்.

Update: 2022-05-17 12:22 GMT

'முகலாயர்கள் 36 ஆயிரம் கோயில்களை அழித்துள்ளனர், அனைத்தையும் மீட்போம்' என கர்நாடக முன்னாள் அமைச்சர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, 'ஒருநாள் இந்தியாவின் தேசியக்கொடி காவிக்கொடி ஆக மாறும் செங்கோட்டையில் காவி கொடி ஏற்றப்படும்' என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் தற்போது இவர் ஒரு கருத்தை கூறியுள்ளார்.


சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியதாவது, 'முகலாயர்கள் 30 ஆயிரம் கோயில்கள் அழித்திருக்கின்றனர், ஸ்ரீரங்கபட்டணாவில் கோவில் மசூதி இருந்த இடத்தில் அனுமன் கோவில் இருந்தது. மசூதி கட்டும்பொழுது அனுமன் கோவில் அருகில் இடம் மாற்றினார்கள் ஒரு கோவிலை இடமாற்றம் செய்த அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது ஏன்?' என கேள்வி எழுப்பினர்.


மேலும் பேசிய அவர், 'ஸ்ரீரங்கப்பட்டணாவில் அனுமன் கோவில் இருந்தது என இஸ்லாமியர்களும் ஏற்றுக்கொள்கின்றனர் இதற்கு முன் காங்கிரஸ் என்ன சொல்கிறது நீதிமன்ற தீர்ப்புகளின் படி அமைதியான முறையில் சட்டத்தின் வழியில் அனைத்து கோவில்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.


Source - Junior Vikatan

Similar News