மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினம்.. ஜனாதிபதி, பிரதமர் மரியாதை.!

மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினம்.. ஜனாதிபதி, பிரதமர் மரியாதை.!

Update: 2021-01-30 12:18 GMT

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

மாநில முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில், மகாத்மா காந்தி நினைவு தின்ததை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மகாத்மா காந்தியின் அமைதி, அகிம்சை, எளிமை உள்ளிட்ட கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாத்மா காந்தியின் கொள்கைகள் பல லட்சம் மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. இந்த சமயத்தில் இந்திய தேசத்திற்காக உயிர்தியாகம் செய்தவர்களை நினைவு கூர்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

Similar News