ஆப்கான் விவகாரம் : அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அந்நாட்டில் வசித்து வந்த இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. அதன்படி கடந்த ஒரு வாரங்களாக ஏர் இந்தியா மற்றும் இந்திய விமானப்படை விமானங்கள் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருகிறது.

Update: 2021-08-23 13:21 GMT

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அந்நாட்டில் வசித்து வந்த இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. அதன்படி கடந்த ஒரு வாரங்களாக ஏர் இந்தியா மற்றும் இந்திய விமானப்படை விமானங்கள் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக விவாதம் செய்ய விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.



இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆப்கான் விவகாரம் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மேலும், பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பர்ஹட் ஜோஷி இது குறித்து கூடுதல் தகவல்களை வெளியிடுவார் என பதிவிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: Dailythanthi

Tags:    

Similar News