அயோத்தி ராமர் கோயிலுக்கு பிறகு, மதுரா, பிருந்தாவனம், காசி - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மாஸ்டர் பிளான்!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, மதுரா, பிருந்தாவனம், காசி, விந்தியவாசினி தாம், நைமிஷ் தாம் போன்ற கோயில் நகரங்களும் கவனம் பெரும் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
மாநிலத்தில் எந்த வகுப்புவாத கலவரமும் இல்லை என லக்னோவில் நடந்த பாஜகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் கூறினார். மேலும் மாநிலத்தில் முதன்முறையாக ஈத் முந்திய வெள்ளிக்கிழமையன்று நமாஸ் சாலையில் நடைபெறவில்லை என்று கூறினார்.
காசி விஸ்வநாதர் கோயில் நடைபாதை திறப்பு விழாவிற்கு, தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் காசிக்கு வருகை தருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் பார்வைக்கு ஏற்ப காசியின் முக்கியத்துவத்தை நிரூபித்து வருவதாகவும் கூறினார்.
ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தி அமைதியாக நடைபெற்றது. ஈகைக்கு முந்தைய கடைசி வெள்ளிக்கிழமை நமாஸ் தெருக்களில் நடத்தப்படாதது இதுவே முதல் முறை. நமாஸுக்கு வழிபாட்டு தலங்கள், மசூதிகளில் அவர்களின் மத நிகழ்ச்சிகள் நடத்தலாம்," என்று கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகி, மாநிலத்தின் 80-ல் 75 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு முன்னேறுமாறு கட்சித் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டார். 2019 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக 62 மக்களவைத் தொகுதிகளில் வென்றது, அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் (எஸ்) இரண்டு இடங்களில் வெற்றியைப் பதிவு செய்தது.
2024 லோக்சபா தேர்தலுக்கு இப்போதிலிருந்தே களத்தை தயார் செய்ய வேண்டும். 75 இடங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு முன்னேற வேண்டும்" என்றார்.
Inputs From: NDTV