தரையிறங்கும்போது மின்கம்பத்தில் மோதிய ஏர் இந்தியா விமானம்: விஜயவாடாவில் பரபரப்பு.!

தரையிறங்கும்போது மின்கம்பத்தில் மோதிய ஏர் இந்தியா விமானம்: விஜயவாடாவில் பரபரப்பு.!

Update: 2021-02-20 20:11 GMT

தோகாவில் இருந்து 64 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று ஆந்திர மாநிலம் விஜயவாடா நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது விமானம் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியது. அப்போது தரையிறங்குவதற்கு விமானத்திற்கு சிக்னல் கிடைத்தது. இதனையடுத்து விமானம் ஓடுபாதையில் இறங்கி ஓடிக்கொண்டிருந்தது.

அப்போது விமானம் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தின் ஓரமாக சென்று கொண்டிருந்தபோது மின்கம்பத்தில், விமானத்தின் இறக்கை மோதியது. இதில், இறக்கை பாதிப்புக்குள்ளானது. இந்த விபத்தில் மின்கம்பமும் சாய்ந்து கீழே விழுந்தது. இதனை சுதாரித்துக்கொண்ட பைலட் விமானத்தை அதே இடத்தில் சாமர்த்தியமாக நிறுத்தினார்.

இதனை தொடர்ந்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக விமானத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவத்தால் விஜயவாடா விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த விபத்து தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News