தமிழ்நாட்டில் இந்த 4 மாவட்டங்களில் விமான நிலையங்கள்.. நிதி ஒதுக்கிய மத்திய அரசு.!

தமிழ்நாட்டில் இந்த 4 மாவட்டங்களில் விமான நிலையங்கள்.. நிதி ஒதுக்கிய மத்திய அரசு.!

Update: 2021-02-03 11:36 GMT

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், நெய்வேலி, தஞ்சை, வேலூர் மாவட்டங்களில் புதிய விமான நிலையங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக எம்.பி., வில்சன் தமிழகத்தில் விமான நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது பற்றி கேள்வி எழுப்பினார், இதற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பதில் அளித்து பேசினார்.

தமிழகத்தில் ராமநாதபுரம், தஞ்சாவூர், நெய்வேலி, வேலூர் மாவட்டங்களில் விமான நிலையங்களை அமைப்பதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு அதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News