தெலுங்கானாவில் பா.ஜ.க கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் - அமித்ஷா சவால்

தெலுங்கானாவில் அடுத்த தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.

Update: 2022-06-04 07:45 GMT

தெலுங்கானாவில் அடுத்த தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.

டெல்லியில் தெலுங்கானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு நேற்று மத்திய சுற்றுலா துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, 'மோடி அரசு எந்த மாநிலத்தையும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தவில்லை, தெலுங்கானா அமைக்க பா.ஜ.க எப்பொழுதும் ஆதரவளித்து இருக்கிறது. ஆனால் தெலுங்கானா மாநிலம் சற்று அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது' என்றார்.

தெலுங்கானா மாநில வளர்ச்சிக்காக கடந்த 8 ஆண்டுகளில் 2.5 லட்சம் கோடியை பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு செலவிட்டுள்ளது, தெலுங்கானா மாநிலம் எப்பொழுதும் பிரதமர் மோடி'யின் இதயத்தில் உள்ளது ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாநிலத்தில் இருந்து எங்களுக்கான ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. அடுத்த தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என பேசினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. 


Source - Junior Vikatan

Similar News