இந்தியா முழுவதும் இருந்து குவியும் கற்பாறைகள் - அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் இவ்வளோ பிரம்மாண்டமாக மாறிவிட்டதா?
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன, அடித்தளப் பணிகள் முடிந்து அடுத்த கட்ட பீடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் 5, 2020 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பிறகு ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கியது. ராம் மந்திரின் செயல்பாடுகளுக்கு பொறுப்பு வகிக்கும் ஆணையமான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா கோவிலின் கட்டுமானத்தை மேற்பார்வை செய்கிறது. கட்டுமானக் குழுவின் தலைவராக முன்னாள் ஐஏஎஸ் நிருபேந்திர மிஸ்ரா உள்ளார்.
லார்சன் & டூப்ரோ நிறுவனம், டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் திட்ட மேலாண்மை நிறுவனம் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் நான்கு பொறியாளர்கள் அறக்கட்டளையின் சார்பாக தன்னார்வத்துடன் பணியாற்றுகின்றனர்.
முழுத் திட்டமும் 900 -1,000 கோடி ரூபாய் செலவில் 110 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும். கோவில் வளாகத்தில் ஒரு அருங்காட்சியகம், ஒரு ஆராய்ச்சி மையம் மற்றும் ஒரு காப்பக மையம் ஆகியவை அடங்கும். 2023 டிசம்பரில், கருவறை மற்றும் ராம் சிலை ஆகியவற்றைக் கொண்டிருக்கும் கோயிலின் கீழ் தளம் வழிபாட்டிற்கு தயாராக இருக்கும்.
சமீபத்திய அறிக்கைபடி, கோயிலைச் சுற்றியுள்ள ஆறு ஏக்கர் நிலத்தில் இருந்து 1.85 லட்சம் கன மீட்டர் குப்பைகள் மற்றும் பழங்கால தளர்வான மண் அகற்றப்பட்டது. அஸ்திவாரம் போடப்பட்டு, பீடம் எழுப்பும் பணி இந்த ஆண்டு ஜனவரி 24-ம் தேதி தொடங்கப்பட்டு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கிரானைட் கற்களைப் பயன்படுத்தி இந்த பீடம் எழுப்பப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி செதுக்கப்பட்ட மணற்கற்கள் நிறுவும் பணியும் விரைவில் தொடங்கப்படும். ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள பன்சி-பஹர்பூர் பகுதியில் உள்ள மலைகளில் இருந்து பிங்க் மணற்கற்களால் இந்த மந்திர் கட்டப்படும்.