மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பட்ஜெட்.. பிரதமர் மோடி புகழாரம்.!

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பட்ஜெட்.. பிரதமர் மோடி புகழாரம்.!

Update: 2021-02-01 15:48 GMT

நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும் மற்றும் நாட்டில் சாதகமானவற்றை உண்டாக்கும் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கு அதிகமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: பட்ஜெட்டில் சுயசார்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பார்வையாக உள்ளது. மேலும், தனிநபர்கள், முதலீட்டாளர்கள், தொழில் மற்றும் உள்கட்டமைப்பு துறைக்கு பட்ஜெட் பல மாற்றங்களை கொண்டு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News