பிச்சை எடுக்க தடை விதிக்க முடியாது.. உச்சநீதிமன்றம்.!

கொரோனா தொற்று காரணமாக சாலைகளில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2021-07-27 07:41 GMT

கொரோனா தொற்று காரணமாக சாலைகளில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட மறுப்பு தெரிவித்துள்ளது.


மேலும், வறுமையின் காரணமாக பிச்சை எடுப்பதை உயர்ந்த கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க விரும்பவில்லை. எனவே யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுக்கவில்லை. இதனால் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது. அது மட்டுமின்றி பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு வழங்குவதுதான் தற்போதைய தேவை என்றனர்.

Tags:    

Similar News