காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவரை நியமனம் செய்த மத்திய அரசு!

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு நேர தலைவராக எஸ்.கே. ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-09-28 08:16 GMT

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு நேர தலைவராக எஸ்.கே. ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது பற்றி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காவிரி ஆணையத்தின் முழு நேர தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து கணக்கிடப்பட்டு 5 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம், கர்நாடகா இடையே நடைபெற்று வரும் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News