ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு ஊக்கத்தொகை - மத்திய அரசு விளக்கம்!

Update: 2022-07-26 09:27 GMT

ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி., ஒருவரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியதாவது: ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.120 கோடி ஊக்கத்தொகையும் வழங்குகிறது.

அதன்படி இத்தொகையை பெறுவதற்கு 23 பயனாளிகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த பயனாளிகளின் பட்டியலில் தமிழகம், கர்நாடகா, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 12 ட்ரோன் உற்பத்தியாளர்கள் மற்றும் 11 ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்கள் இடம் பிடித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கான தகுதியாக ட்ரோன் உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.2 கோடியாக இருக்க வேண்டும். அதே போன்று ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.50 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் இல்லாதவர்களுக்கான தகுதியாக ட்ரோன் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.4 கோடியாகவும், ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு விற்பனை வருவாய் ஒரு கோடியாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News