2025 இல் எத்தனால் கலந்த எரிபொருள் - விவசாயிகளை ஊக்குவிக்கும் மத்திய அரசு!

எஞ்சிய கரும்புகளை எத்தனால் உற்பத்திக்கு அனுப்புமாறு சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு ஊக்குவிக்கிறது.

Update: 2022-12-16 03:34 GMT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியாவில் விவசாயிகளின் வருமானம் பல மடங்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு திட்டங்கள் காரணமாக அவர்களுடைய வருமானம் இரட்டிப்பாகி இருக்கிறது. மேலும் நல்ல திட்டங்கள் அதிகரித்து இருக்கிறது. விவசாயிகளையும், விவசாயத்திற்கு நன்மை செய்யும் பல திட்டங்கள் கொண்டுவரப் பட்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது உள்நாட்டில் சர்க்கரை நுகர்வு 260 லட்சம் வெற்றி என்று அளவைவிட இயல்பான சர்க்கரை பருவத்தில் சர்க்கரை ஆலைகள் அதிகப்படியான 320 முதல் 360 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு உற்பத்தி செய்து வைத்திருப்பதாகவும் மத்திய நுகர்வோர் விவகார உணவு மற்றும் பொதுத்துறை விவகாரத்துறை இணை அமைச்சர் ஜோதி மக்களவையில் தெரிவித்திருந்தார்.


மேலும் அதிகப்படியான சர்க்கரை இருப்பு சர்க்கரை ஆலைகளில் இருந்து வைத்து பாதிப்பதாக அவர் கூறினார். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் எஞ்சிய கரும்புகளை எத்தனால் உற்பத்திக்கு அனுப்புமாறு மத்திய அரசு விவசாயிகளை ஊக்குவிக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் 20% எத்தனால் கலந்து எரிபொருள் என்று மத்திய அரசு அளித்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் 4.37 லட்சம் மெட்ரிக் டன், 2019 ஆம் ஆண்டில் 9.26 லட்சம் மெட்ரிக் டன் பெற்று 2020 ஆண்டில் 22 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் 2021 ஆம் ஆண்டில் 36 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை கொண்டு உற்பத்திக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.


நடப்பு சர்க்கரை பருவத்தில் என்ஜி  றியுள்ள சுமார் 45 முதல் 50 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான சக்கரையை எத்தனை நாள் உற்பத்திக்கு அனுப்புவது என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 2025 ஆம் ஆண்டிற்குள் 60 லட்சம் மெட்ரிக் டன்களுடன் சர்க்கரையை எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்துவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News