பொங்கல் வாழ்த்து: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்வீட்!

Update: 2022-01-14 07:24 GMT

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் மிகவும் பாரம்பரிய திருவிழாவான தைப்பொங்கல் இன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் புத்தாடை அணிந்து புதிய பானையில் அதிகாலையில் பொங்கல் வைத்து இறைவனுக்கு வழிபாடு நடத்தியுள்ளனர். மேலும், இல்லங்கள் தோறும் வண்ணக்கோலங்களால் பொங்கலை வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், தைதிருநாளான பொங்கலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் பொங்கல் வாழ்த்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான திருநாழ் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியததையும் வழங்கட்டும். இவ்வாறு அவர் தனது வாழ்த்து பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News