அரசு மின்சார வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்! முதலமைச்சர்களுக்கு மத்திய அமைச்சர் கடிதம்!

மாநில அரசுகள் தங்களது வாகனங்கள் அனைத்தையும் மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய மின்சக்தி, புதுப்பிக்கதக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே. சிங் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-08-28 03:44 GMT

மாநில அரசுகள் தங்களது வாகனங்கள் அனைத்தையும் மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய மின்சக்தி, புதுப்பிக்கதக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே. சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசே தனது அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்றும் நடவடிக்கை பொது மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும். அது மட்டுமின்றி மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கு தூண்டுதலாக அமையும்.

மேலும், மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு தொடங்கியுள்ள 'மின் எரிபொருளுக்கு' மாறும் பிரச்சாரத்த்தின் பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது' என்று கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2831773

Tags:    

Similar News