ஆந்திரா, ஒடிசா இடையே இன்று கரையை கடக்கும் 'குலாப்'! தமிழகத்திற்கு ஆபத்து உள்ளதா?

வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே இன்று கரையை கடக்க உள்ளது.

Update: 2021-09-26 09:10 GMT

வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே இன்று கரையை கடக்க உள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. அந்த புயல் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தப் புயலுக்கு 'குலாப்' என்று பெயரை பாகிஸ்தான் பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை வடக்கு, ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரை விசாகப்பட்டினம், கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தேசிய பேரிடர் மேலாண்மை படையின் 18 குழுக்கள் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இப்புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் சுமார் 95 கி.மீ. வரை இருக்கலாம் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயலால் தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Source, Image Courtesy: News 7


Tags:    

Similar News