இந்து மத போதகரை கொல்ல சதி - 4 பேர் மீது மொஹாலி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஜனவரி மாதம் காலிஸ்தான் புலிப்படையின் அதிரடிப்படையினரால் இந்து மத போதகர் கமல்தீப் சர்மா கொலை செய்யப்பட்டார். அவரை கொல்ல சதித் திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீது மொஹாலி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்து மதகுருவைக் கொன்றதன் மூலம் பஞ்சாபில் அமைதியைக் குலைக்கவும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும், கனடாவைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங் என்கிற அர்ஷ் மற்றும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஆகியோர் சதித் திட்டம் தீட்டியதாக என்ஐஏ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான கமல்ஜீத் சர்மா மற்றும் சோனா என்கிற ராம் சிங் ஆகியோர் கனடாவைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங்கின் வழிகாட்டுதலின் பேரில், கமல்தீப் சர்மாவை சுட்டுக் கொன்றனர்.
குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்டவர்களில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், ஜலந்தரை சேர்ந்தவர். ஆனால் தற்போது கனடாவின் சர்ரேயில் வசிக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு முதலில் ஜனவரி 31, 2021 அன்று பஞ்சாப் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டது, மேலும் இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 8, 2021 அன்று என்ஐஏ எடுத்துக்கொண்டது, மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Input From : tribuneindia