சரக்கு ரயில்களில் திரவ ஆக்சிஜன் கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகள் தயார்.!
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் மருத்துவப் பயன்பாட்டிற்கான ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் மருத்துவப் பயன்பாட்டிற்கான ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு லாரிகளில் எடுத்துசெல்வதற்கு நேரம் அதிகமாகிறது. இதனை கருத்தில் கொண்ட மத்திய ரயில்வே அமைச்சகம், ஆக்சிஜன் லாரிகளை சரக்கு ரயில்களில் அனுப்பவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அதன்படி மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை திரவ நிலையில், ரயில்களில் எடுத்துச் செல்வதற்கு மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.