கொரோனா தடுப்பூசி: வெறும் ஆறே நாட்களில் உலகின் பல நாடுகளின் சாதனையை முறியடித்த இந்தியா!
கொரோனா தடுப்பூசி: வெறும் ஆறே நாட்களில் உலகின் பல நாடுகளின் சாதனையை முறியடித்த இந்தியா!
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா ஜனவரி 16 ஆம் தேதி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கோவிட் -19 தடுப்பூசிகளுடன் தொடங்கியது - கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் உலகின் பிற நாடுகள் மற்றும் அண்டை பிராந்தியங்களுக்கு ஏற்றுமதி செய்தாலும் கூட, தடுப்பூசி போடும் பணி தொடங்கி முதல் ஆறு நாட்களுக்குள் இந்தியா 1 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. குறுகிய காலத்தில் இந்த இலக்கை எட்டிய முதல் நாடாக இந்தியா மாறியது.
Over 25 lakh vaccine doses administered so far, as per data available till 2 pm today. Number of active cases are declining, there are 1,75,000 active cases in the country as of now - a steady & declining trend is being exhibited: Union Health Secretary Rajesh Bhushan#COVID19 pic.twitter.com/qI4pBL1X3d
— ANI (@ANI) January 28, 2021
ஆறு நாட்களுக்குள் மிக விரைவாக 1 மில்லியன் கோவிட் -19 தடுப்பூசிகளை எட்டிய நாடு என்ற பெயர் வாங்கியது இந்தியா. அமெரிக்கா 10 நாட்களில், ஸ்பெயின் 12 நாட்களில் ,இஸ்ரேல் 14 நாட்களில் , ஐக்கிய இராச்சியம் 18 நாட்களில் , இத்தாலி 19 நாட்களில் , ஜெர்மனி 20 நாட்களில் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 27 நாட்களில் எட்டிய இலக்கை இந்தியா வெறும் 6 நாட்களில் எட்டியதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் வியாழக்கிழமை புதுதில்லியில் கூறினார்.
தடுப்பூசி செலுத்தும் பணியில் ராஜஸ்தான், ஒடிசா போன்ற மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன என்றும், டெல்லி, மகாராஷ்டிரா போன்றவை மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒடிசா, ஹரியானா, ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகியவை சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் 35 சதவீதத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுகின்றன. தமிழ்நாடு, டெல்லி, ஜார்க்கண்ட், உத்தரகண்ட், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவில் 21 சதவீதத்திற்கும் குறைவான தடுப்பூசி பாதுகாப்பு உள்ளது, அவை மேம்படுத்தப்பட வேண்டும் ”என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.