இந்தியாவில் 12- 14 வயது சிறார்களுக்கு மார்ச் 16 முதல் கொரோனா தடுப்பூசி!

Update: 2022-03-14 10:00 GMT

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்க தடுப்பூசி முழுமையாக போடப்பட்டு வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் தவணைகளில் தடுப்பூசி போடப்படுகிறது.

கொரோனா தொற்று பாதிப்பின் வீரியம் தற்போது குறைவாக இருப்பதற்கு தடுப்பூசியே முக்கிய காரணமாக இருப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு நாளை மறுநாள் (மார்ச் 16) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News