பெங்களூரு: 200க்கும் அதிகமான சிக்னல் பேட்டரிகளை திருடிய சிக்கந்தர் தம்பதி!

.

Update: 2022-02-18 13:07 GMT

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் 200க்கும் அதிகமான போக்குவரத்து சிக்னல் பேட்டரிகளை திருடிவந்த முஸ்லிம் தம்பதியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பெங்களூரு மாநகரில் உள்ள சிக்னல்களில் சில மாதங்களாகவே போக்குவரத்து சிக்னல்களில் வைக்கப்பட்ட பேட்டரிகள் காணாமல் போனது. இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக போலீசார் பல்வேறு முயற்சிகளை கையாண்டு வந்தனர்.

இந்நிலையில், பேட்டரி திருடுபோவது தொடர்பாக கணவன், மனைவி ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தம்பதி கடந்த ஓராண்டாக பெங்களூரு நகரத்தில் உள்ள 68 சிக்னல்களில் இருந்த 230க்கும் அதிகமான பேட்டரிகளை திருடிச்சென்றதை ஒப்புக்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சிக்கபனாவரத்தைச் சேர்ந்த சிக்கந்தர் மற்றும் அவரது மனைவி நஸ்மா சிக்கந்தர் என்பது தெரியவந்துள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News