புதிய வடிவில் தலை தூக்கும் கொரோனா வைரஸ்: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட பிரதமர் மோடி அறிவுரை!

Update: 2022-04-10 14:00 GMT

ராமநவமி இன்று கொண்டாட்டத்தை தொடர்ந்து குஜராத் மாநிலம், கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோயில் நிறுவன தினத்தின் வாயிலாக காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: கொரோனா வைரஸ் பெருந்தொற்று நாட்டை விட்டு முற்றிலுமாக வெளியேறவில்லை. தற்போது கொரோனா நெருக்கடி முடிந்து விட்டதாக நாங்கள் சொல்லவில்லை. அது புதிய வடிவங்களில் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. எனவே பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையை குறைத்துவிட வேண்டாம்.

ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 185 கோடி டோஸ் தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஆதரவுடன் இவை சாத்தியமாகியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News