டெல்லி: மசூதியில் சாப்பாடு கொடுக்க சென்ற சிறுமியிடம் சில்மிஷம் செய்த மதகுரு! புரட்டி எடுத்த பொதுமக்கள்!

டெல்லி அருகே உள்ள கூர்கா நகர் பகுதியில் ஒரு மசூதி உள்ளது. அந்த மசூதிக்கு 9 வயது சிறுமி சாப்பாடு எடுத்து சென்றிருந்தார். அப்போது தலைமை மதகுரு வெளியில் சென்றுள்ளார்.

Update: 2021-09-28 12:59 GMT

டெல்லி அருகே உள்ள கூர்கா நகர் பகுதியில் ஒரு மசூதி உள்ளது. அந்த மசூதிக்கு 9 வயது சிறுமி சாப்பாடு எடுத்து சென்றிருந்தார். அப்போது தலைமை மதகுரு வெளியில் சென்றுள்ளார்.

இதனிடையே உதவி மதகுரு மட்டுமே மசூதியில் இருந்துள்ளார். சிறுமியின் கையை பிடித்து இழுத்து முத்தம் இட்டு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனிடையே பதற்றம் அடைந்த சிறுமி மசூதியை விட்டு வெளியே ஓடி வந்த சிறுமி நடந்ததை அழுதுகொண்டே பெற்றோரிடம் கூறியிருந்தாள்.

இதன் பின்னர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மசூதிக்கு சென்று உதவி மதகுருவை வெளியில் இழுத்து வந்து சரமாரியாக அடித்து, அருகாமையில் உள்ள பட்டோடியா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source: Dinamalar

Image Courtesy:Shutterstock


Tags:    

Similar News