டெல்லி : தமிழக இல்லம் முன்பு முதல்வர் ஸ்டாலினின் உருவ பொம்மை எரிப்பு! தேசிய அளவில் எதிர்ப்பை சம்பாதிக்கும் தி.மு.க அரசு!

Update: 2022-02-15 13:28 GMT

டெல்லியில்  ABVP மாணவ அமைப்பினர்,  தமிழ்நாடு இல்லம் முன்பு, தமிழக முதல்வர் ஸ்டாலினது  உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.


நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின்  வீட்டின் முன்பு, ABVP மாணவர் அமைப்பினர், "இறந்த தஞ்சை  மாணவிக்காக நீதி வேண்டி, அவரது தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு  தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்" என்ற நிபந்தனையுடன் முதல்வர் வீடு முன்பு  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 


அப்போரட்டத்தில் ABVP அமைப்பின்  தேசிய பொதுச் செயலாளர் நிதி திருப்பாதி மற்றும் தேசிய செயலாளர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழக அரசின் காவல்துறை அராஜக நடவடிக்கையாக அவர்களை வலுக்கட்டாயமாக அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியது.


தமிழக அரசின் இந்த அராஜக போக்கை பலரும் கண்டித்து வரும் நிலையில், டெல்லியில் தமிழக இல்லம் முன்பு டெல்லி ABVP அமைப்பினர்  முதல்வர் ஸ்டாலின் அவர்களது உருவபொம்மையை எரித்து,  தங்களது  எதிர்ப்புக் குரலை பதிவு செய்தனர்.

SWARAJYA


Tags:    

Similar News