தெரியாமலே மூடி மறைக்கப்படும் சம்பவங்கள் : 31 வயதான நபரை விருத்தசேதனம் செய்து இஸ்லாத்துக்கு மாற்ற முயன்ற மருத்துவர் !

நமாஸ் செய்யவும், முஸ்லீம் சடங்குகளை பின்பற்றவும் கட்டாயப்படுத்தப்பட்டார்.

Update: 2021-09-26 06:23 GMT

மத்திய பிரதேசத்தின் அகர்-மால்வா பகுதியில் கட்டாய மதமாற்ற வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 31 வயதான ஒருவர் தன்னை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றும் நோக்கத்துடன் 2 பேர் மீது புகார் அளித்துள்ளார். அவரை கட்டாயப்படுத்தி விருத்தசேதனம் செய்ததாக கூறப்படுகிறது. 

பாதிக்கப்பட்ட தஷ்ரத் என்பவர் மாலிகேடாவைச் சேர்ந்த டாக்டர் நசீர் கான் என்பவரின் கீழ் பணிபுரிந்தார். மருத்துவர் தனது மகனுடன் சேர்ந்து அவரது விருப்பத்திற்கு மாறாக விருத்தசேதனம் செய்தார். அவர் இஸ்லாத்தை தழுவ கட்டாயப்படுத்தி  மிரட்டப்பட்டார். சில நேரங்களில் நமாஸ் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்.

காவல்துறையினருக்கு தனது துன்பத்தை விவரித்த தஷ்ரத், டாக்டர் நசீரும் அவரது மகனும் அவரை கோவில்களுக்கு செல்வதை முற்றிலுமாக தடைசெய்ததாக கூறினார். அதற்கு பதிலாக நமாஸ் செய்யவும், முஸ்லீம் சடங்குகளை பின்பற்றவும் கட்டாயப்படுத்தப்பட்டார். அவரது புகாரைத் தொடர்ந்து, டாக்டர் நசீர் கான் மீது மத்தியப் பிரதேச மத சுதந்திர சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் நசீர் ஏற்கனவே இதே வழக்கில் கைதானவர்

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், ஏற்கனவே குற்றவாளி என்றும், அவருக்கு எதிராக ஆகர் மாவட்டத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் காவல்துறையினர் கூறினார். 

விருத்தசேதனம் இஸ்லாத்தில் ஒரு முக்கியமான சடங்காக கருதப்படுகிறது. வெளிப்படை தூய்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்த சடங்கு முஹம்மது நபியின் காலத்திற்கு முந்தையது. பாரம்பரியத்தின் படி, முஹம்மது முன்கை இல்லாமல் பிறந்தார், எனவே அனைத்து முஸ்லீம் ஆண்களுக்கும் இதனை செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர். இவ்வளவு நாள் கொடுமையை அனுபவித்து வந்த தஷ்ரத், செப்டம்பர் 23 அன்று  மருத்துவர் மற்றும் அவரது மகன் மீது புகார் அளிக்க காவல்நிலையத்தை அணுகினார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, இது குறித்து விசாரணையை தொடங்கினர்.

Tags:    

Similar News