நேபாளம் - இந்தியா இடையே நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0 ஆக பதிவு.!

நேபாளம் - இந்தியா இடையே நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0 ஆக பதிவு.!

Update: 2021-02-05 07:47 GMT

நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே உளள சிக்கிமில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியுள்ளது. இழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே சிக்கிமில் யுக்சம் நகர் அருகே நேற்று காலை 10.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இன்று மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் சிக்கிமில் பதிவாகியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News