85 சதவீத முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்.!

85 சதவீத முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்.!

Update: 2021-02-15 18:39 GMT

நாடு முழுவதும் இதுவரை 85 சதவீத முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: வருகின்ற மார்ச் மாதத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். கடந்த ஒரு வாரத்தில் 188 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை.

இதுவரை நாடு முழுவதும் 85 சதவீத முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மேலும் 18 முதல் 20 தடுப்பூசிகள் தற்போது பரிசோதனை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Similar News