சிவன் கோவிலுக்குள் இறைச்சி துண்டை வீசிய கும்பல் - மக்கள் கொதித்து எழுந்ததால் தொடரும் பதற்றம்!
உத்தரபிரதேசத்தில் உள்ள கன்னோஜின் தலகிராம் பகுதியில் உள்ள ரசூலாபாத் கிராமத்தில் ஒரு இந்து கோவிலுக்குள் இறைச்சி துண்டுகள் வீசப்பட்டதால் கலவரம் வெடித்தது. கோவிலில் இறைச்சி துண்டு வீசப்பட்ட சம்பவத்தால் ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதிகாரிகள் மக்களை அமைதிப்படுத்த முயன்றனர். இச்சம்பவம் நடந்த மதியம், சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் சிலர் இறைச்சி கடைகளுக்கு தீ வைத்தனர்.
இதற்கிடையில், கோவிலில் இருந்த சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கையின் படி, கன்னௌஜ் மாவட்டத்தில் உள்ள ரசூலாபாத் கிராமத்திற்கு வெளியே உள்ள சிவன் கோவிலில் யாரோ ஒருவர் இறைச்சித் துண்டை இரவில் வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையில், தினசரி பூஜை செய்ய பூசாரி வந்தபோது, கோவிலுக்குள் இறைச்சி துண்டு கிடப்பதாக கிராம மக்களுக்கு தெரிவித்தார். விஷயம் தெரிய வந்ததும், சிஓ ஷிவ் பிரதாப் சிங் மற்றும் எஸ்ஹோ ஹரிஷ்யம் சிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவிலை சுத்தம் செய்வதை உறுதி செய்தனர்.
தகவல் பரவியதால், மக்கள் கொதிப்படைந்தனர். மதியம், அந்த பகுதியில் உள்ள இறைச்சி கடைகளுக்கு யாரோ தீ வைத்தனர். இதைத் தொடர்ந்து, உள்ளூர் கோயிலுக்குள் இருந்த சிலையை சில மர்ம நபர்கள் அவமானப்படுத்தினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. சம்பவ இடத்திலேயே விஷயங்களைக் கட்டுப்படுத்த கன்னோஜில் இருந்து கூடுதல் படை வரவழைக்கப்பட்டது. தற்போது, அனைத்து காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திலேயே இருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. நிலைமையைக் கருத்தில் கொண்டு உள்ளூர் சந்தையையும் போலீசார் மூடியுள்ளனர்.
Input From: Opindia