பரபரப்பு! சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சசிகலா!

பரபரப்பு! சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சசிகலா!

Update: 2021-01-20 18:31 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹர சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது சிறை தண்டனை தற்போது முடிவடைந்துள்ளது. வருகின்ற 27ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்போகிறார் என சிறை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

சசிகலாவை வரவேற்பதற்காக அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், சசிகலாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல் வெளியிட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு முதற்கட்டமாக பரிசோதனை செய்ததில் அவருக்கு காய்ச்சல் மற்றும், இருமல், மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர் அவரை மருத்துவமனைக்கு மாற்றும்படி சிறை நிர்வாகத்தினரிடையே கோரிக்கை வைத்தனர். மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று அவரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் போலீசார் அழைத்து சென்றனர். மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News