விவசாயிகள் தங்கள் பொருட்களை உலகில் எங்கு வேண்டுமானாலும் விற்கலாம்.. மத்திய உள்துறை அமைச்சர் பெருமிதம்.!

விவசாயிகள் தங்கள் பொருட்களை உலகில் எங்கு வேண்டுமானாலும் விற்கலாம்.. மத்திய உள்துறை அமைச்சர் பெருமிதம்.!

Update: 2021-01-17 20:10 GMT

கர்நாடகா மாநிலத்திற்கு 2 நாள் அரசுமுறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றுள்ளார். அங்கு நடந்த பல்வேறு வேளாண் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அங்கு அவர் உரையாற்றியதாவது: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்துவதே முன்னுரிமையாக அரசு கொண்டுள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தைப் பல மடங்கு உயர்த்த உதவும். இதன் மூலமாக விவசாயிகள் தங்களின் விலை பொருட்களை உலகின் ஏந்தப் பகுதியில் வேண்டுமானாலும் எடுத்து சென்று விற்கலாம்.

ஆனால், காங்கிரஸ் கட்சியினர் வேண்டும் என்றே விவசாயிகளை தூண்டி விட்டு போராட்டம் செய்து வருகின்றனர் என குறிப்பிட்டார்.

Similar News