மும்பை: தீ விபத்தால் 19 மாடியில் இருந்து தப்பிக்க குதித்தவர் பலி !

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை கரே சாலை லோயர் பரேல் பகுதியில் உள்ள அவிக்னானா பார்க் குடியிருப்பின் 60 மாடி கட்டிடத்தில் உள்ள 19வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குடியிருப்பு பகுதி என்பதால் பலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Update: 2021-10-22 10:33 GMT

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை கரே சாலை லோயர் பரேல் பகுதியில் உள்ள அவிக்னானா பார்க் குடியிருப்பின் 60 மாடி கட்டிடத்தில் உள்ள 19வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குடியிருப்பு பகுதி என்பதால் பலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தீ எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இந்த விபத்து இன்று பிற்பகல் 12 மணி அளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தீ விபத்து ஏற்பட்ட 19வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே வருவதற்கு முயற்சி செய்த ஒருவர் கீழே விழுந்து சகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் மும்பை மாநகர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News