மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்ட கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை!

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் விவசாய நிலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை நேரில் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-11-23 10:45 GMT

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் விவசாய நிலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை நேரில் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆய்வு மேற்கொண்டார்.


அதே போன்று கர்நாடகா தலைநகர் பெங்களூரு நகரிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரில் உள்ள எலகங்கா ஏரியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கேந்திரிய விகார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


இந்நிலையில், பெங்களூருவில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திறந்த ஜீப்பில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கேந்திரிய விகார் குடியிருப்பு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யத்தயார் எனவும் உத்தரவாதம் அளித்தார். அதன்படி மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். முதல் தவணையாக ஒரு லட்சம் விடுவிக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


அது மட்டுமின்றி மாநிலங்களில் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைப்பதற்கும் மாநில அரசு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை நேரில் சென்று மழையால் சேதமடைந்த பயிர்களையும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை பாஜக அரசு வழங்கும் எனவும் கூறினார்.

Source: Daily Thanthi

Image Courtesy: Twiter


Tags:    

Similar News