பயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அரசு பேருந்து !

தெலங்கானாவில் அரசுப் பேருந்து ஒன்று மழை வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட நிலையில் அதில் இருந்த 25 பயணிகள் மீட்கப்பட்டனர்.

Update: 2021-08-31 13:19 GMT

தெலங்கானாவில் அரசுப் பேருந்து ஒன்று மழை வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட நிலையில் அதில் இருந்த 25 பயணிகள் மீட்கப்பட்டனர்.

தெலங்கானா சிறிசில்லா மாவட்டம், கம்பீரவுப்பேட்டை, லிங்கண்ணப்பேட்டை இடையே அம்மாநில அரசுப் பேருந்து சென்று வருகிறது. வழக்கம் போல் நேற்று மாலை பேருந்து மன்னேறு ஆற்று கால்வாய் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது திடிரென்று வெள்ளத்தில் சிக்கியது.

இது பற்றி தகவல் அறிந்த மீட்புபடையினர் உடனடியாக பேருந்தில் மாட்டிக்கொண்டவர்களை மீட்டனர். ஆனால் பேருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

Source,: Polimer

Image Courtesy: The Hans India

https://www.polimernews.com/dnews/154457/பயணிகளுடன்-வெள்ளத்தில்சிக்கி-அடித்து-செல்லப்பட்டஅரசுப்-பேருந்து

Tags:    

Similar News