கொரோனா காலத்தில் அனைவருக்கு இலவச தானியங்கள் வழங்கப்பட்டது.. நிர்மலா சீதாராமன்.!

கொரோனா காலத்தில் அனைவருக்கு இலவச தானியங்கள் வழங்கப்பட்டது.. நிர்மலா சீதாராமன்.!

Update: 2021-02-01 11:43 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கினர்.

அது போன்றவர்களுக்காக மத்திய அரசு பல்வேறு வகையிலான உதவிகளை செய்து வந்தது. முதலில் அனைவருக்கும் உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா தொற்று காலத்தில் அனைவருக்கும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News