கொரோனா கோர தாண்டவம்.. மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்த கேரளா.!
கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. நேற்று மட்டும் 17 ஆயிரத்து 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 105 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. நேற்று மட்டும் 17 ஆயிரத்து 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 105 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பின் கோர தாண்டவம் ஆடி வருவதால், அதனை கட்டுப்படுத்த கேரள கம்யூனிஸ்ட் அரசு மெத்தனம் காட்டி வருவதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், தொற்றின் பரவலை கட்டுப்படுத்த வருகின்ற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.