ரூ.280 கோடி ஹெராயின் படகுடன் 9 பாகிஸ்தானியர் கைது - இந்திய கடலோர காவல் படை அதிரடி!

Update: 2022-04-26 12:42 GMT

குஜராத் அருகே இந்திய கடல் பகுதியில் பாகிஸ்தான் படகு ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது. இதனை பார்த்த இந்திய கடலோர காவல் படையும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் அப்படகை விரட்டிப்பிடித்தனர்.

இதன் பின்னர் படகில் இருந்த ரூ.280 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்தனர். அதில் இருந்த 9 பாகிஸ்தானியரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

யாரிடம் கொடுப்பதற்காக ஹெராயின் கடத்தி வந்தனர் என்பனவற்றையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னர் மேலும், பல்வேறு விசாரணைகளுக்காக கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜகாவு துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். குஜராத் கடல் எல்லையில் ரூ.280 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Source: Malaimalar

Image Courtesy:The Himalayan Times

Tags:    

Similar News