கொடூரம்! காவல்துறை மீதே துப்பாக்கிச் சூடு நடத்திய கால்நடை கடத்தல் கும்பல்!

கொடூரம்! காவல்துறை மீதே துப்பாக்கிச் சூடு நடத்திய கால்நடை கடத்தல் கும்பல்!

Update: 2021-02-12 16:59 GMT
கால்நடைகளைப் படுகொலை செய்யப்படுவதிலிருந்து தடுக்க பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. தற்போது அந்த குற்றங்களைச் செய்பவர்களைத் தடுக்க வரும் அதிகாரிகளையும் எந்த வித அச்சமுமின்றி தாக்குதல் நடத்துகின்றன. ஹரியானா மேவாட் பகுதியில் கால்நடை கடத்தல் காரர்கள் மற்றும் கிராம மக்கள் காவல்துறை மீது கற்களை வீசியும் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தித்  தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் காவல்துறை வாகனத்தைச் சேதம் செய்து 24 பசுக்கள், கன்றுகள் மற்றும் காளைகளைக் கடத்தி சென்றுள்ளனர்.


இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 60 அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் 10 பேர் மீது, கொலை முயற்சி, அரசு வேலையில் தடையை ஏற்படுத்தியது, காவல்துறை வாகனத்தைச் சேதம் செய்தது மற்றும் கால்நடை தடுப்பு சட்டம் சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காயமடைந்த காவல்துறை கல்யாண் வாக்குமூலத்தின் படி, அவர்களுக்குப் பசுக்களைக் கொலை செய்யப்போவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட போது ஒரு வீட்டில் 30 முதல் 40 கால்நடைகளைக் கட்டிவைத்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அங்குள்ள கடத்தல்காரர்கள் அச்சமடைந்துள்ளனர். 
 

காவல்துறை அதனை மீட்க முயற்சித்த போது, கடத்தல் கும்பல் அவர்களை வழிமறித்து கற்களை வீசியுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூட்டையும் கும்பல் செய்துள்ளது. பல காவல்துறை காயமடைந்ததைத் தொடர்ந்து காவல்படை அங்கு குவிந்ததும்  குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி விட்டனர். 

Similar News