"BANGLADESH YOUTH" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட திருமண பேனர் ! ஹைதராபாதில் ஒரே பரபரப்பு !

Update: 2021-10-21 08:04 GMT

ஹைதராபாத் மாநகராட்சியில் , வங்காளதேச இஸ்லாமியர்கள் "பங்கிலாதேஷ் யூத்" என்று பொறிக்கப்பட்ட வாசகத்துடன் ஒரு  மிகப்பெரிய திருமண வாழ்த்து பேனர்  வைத்தது அதிர்வலைகளை  கிளப்பியுள்ளது. 

ஹைதராபாத் மாநகராட்சியில், சரூர்நகர் பகுதியில், MRO அலுவலகத்துக்கு அருகில், 30 இளைஞர்கள் புகைப்படம் கொண்ட ஒரு திருமண வாழ்த்து பேனர் வைக்கப்பட்டது. அந்த பேனரில் "BANGLADESH YOUTH( வங்காளதேசத்து  இளைஞர்கள்) MILAD UN NABI Mubarak " என்று பொறிக்கப்பட்ட வாசகம்  இடம் பெற்றிருந்தது.



இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் அப்புகாரை ஏற்று நடவடிக்கையை முன்னெடுக்கையில், " BANGLADESH YOUTH( பங்களாதேஷ் யூத்) என்ற வாசகம் "MIA BHAI YOUTH (மியா பாய் யூத்) என்று மாற்றப்பட்டது.



வங்கதேசத்தில்  சிறுபான்மை இந்துக்களுக்கு நடந்து வரும் அநீதிக்கு மத்தியில், வங்கதேசத்து இளைஞர்கள் ஹைதராபாதில்  பகிரங்கமாக தங்களை அடையாளப்படுத்துவது தேச பாதுகாப்புக்கும், அப்பகுதி அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல் ஆகும். 

ஹைதராபாத் காவல் துறையும் இந்த புகாரை, பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை போலும், அந்த இளைஞர்கள் மேல் காவல்  துறை தீர விசாரிக்கவும் இல்லை, அவர்கள் மேல் எந்த அதிரடி நடவடிக்கை பாயவும் இல்லை. என்ற தகவல் மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

Nijam Today

 

Tags:    

Similar News