பெண் எழுத்தாளர் பாலியல் பலாத்காரம் - பின்னணியில் தாவூத் இப்ராஹிம் கும்பல் சதி திட்டம்!

Update: 2022-06-17 10:06 GMT

மும்பையில் ரூ.2 கோடி கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் 75 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர் 35 வயதுடைய பெண் எழுத்தாளரை பலாத்காரம் செய்தது மட்டுமன்றி நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயரில் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மிகப்பெரிய மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை ஜூகு பகுதியை சேர்ந்தவர் 35 வயது மதிப்புடைய பெண். இவர் ஒரு எழுத்தாளர் ஆவார். இவரிடம் ஒரு 75 வயதான தொழில் அதிபர் ரூ.2 கோடி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இவர் கடன் வாங்கிய பின்னர் மீண்டும் அதனை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் பெண் எழுத்தாளர் மீண்டும் கடனை தருமாறு கேட்டுள்ளார். அப்போது ஏதாவது ஒரு காரணத்தை கூறி தொழிலதிபர் சமாளித்து வந்துள்ளார்.

இருந்தபோதிலும் பெண் எழுத்தாளர் விடாமல் கடனை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தொழில்அதிபர், பெண் எழுத்தாளரை ஸ்டார் ஓட்டலுக்கு வந்தால் பணம் கொடுப்பதாக கூறி வரவழைத்துள்ளார். இதனை நம்பி சென்ற பெண் எழுத்தாளருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பெண் எழுத்தாளருக்கு பணம் கொடுக்காமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது நடந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால் நிலழ் உலக தாதா தாவூத் இப்ராஹிம் வைத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கு பின்னர் எழுத்தாளருக்கு மர்ம நபர்கள் போன் செய்து, தாவூத் இப்ராஹிம் பெயரில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். போலீசிலும் வெளியாட்களிடமும் நடந்த சம்பவம் பற்றி சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் போன் மூலமாக கூறியுள்ளனர்.

இதனால் உயிருக்கு பயந்து பெண் எழுத்தாளர் அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்ராஹிம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மகாராஷ்டிரா மாநில போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: One India Tamil

Tags:    

Similar News