இந்தியாவில் பணவீக்கம் நிச்சயம் குறையும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை!

இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் பணவீக்கம் சதவீதம் குறைந்து இருக்கிறது இது மேலும் குறையும் என்றும் மத்திய அமைச்சர் நம்பிக்கை.

Update: 2022-12-16 03:35 GMT

நாட்டில் பணவீக்கம் 6 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி இலக்கிற்கு கீழ், தற்பொழுது அதிகமாகவே பணவீக்க அளவை குறைத்து இருந்த நிலையில், அது மேலும் குறைய வாய்ப்பிருப்பது. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியிருந்தார். கடந்த ஜனவரி மாத தொடங்கிய ஆறு சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த பணவீக்கம் 6.77 சதவீதமாக இருந்தது இதனை இரண்டு முதல் ஆறு மாதத்திற்குள் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்திருந்தது.


பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவிற்கு நவம்பரில் 5.88 சதவீதமாக குறைந்து இருக்கிறது. மக்கள் அவையில் புதன்கிழமை நடைபெற்ற 2022-2023 ஆம் நிதி ஆண்டிற்கான துணை மாநில கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்த நிதியமைச்சர் பேசும் பொழுது, சில்லறை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.


மேலும் இவற்றை குறைப்பதற்கு கட்டாயம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. குறைந்த பணவீக்கத்துடன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. எனவே பொருளாதாரத்தை கண்ணனை குறித்த அச்சம் செய்து கிடையாது என்று குறிப்பிடுகிறார். மேலும் அன்னிய செலவாணி கையிருப்பிலும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். 

Input & Image courtesy:Hindu News

Tags:    

Similar News