50 கோடியை தாண்டிய கொரோனா தடுப்பூசி! பிரதமர் மோடி பெருமிதம் !

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியை கடந்து விட்ட நிலையில், இதனை மேலும் அதிகரித்து அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தின் மூலமாக நமது மக்கள் தடுப்பு மருந்து பெறுவதை உறுதி செய்ய இந்தியா நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Update: 2021-08-07 07:52 GMT

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியை கடந்து விட்ட நிலையில், இதனை மேலும் அதிகரித்து அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தின் மூலமாக நமது மக்கள் தடுப்பு மருந்து பெறுவதை உறுதி செய்ய இந்தியா நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


இது பற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: கொரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போருக்கு வலுவான உத்வேகம் கிடைத்துள்ளது. தடுப்பு மருந்து அளிக்கப்படும் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ளது.

இதனை மேலும் அதிகரித்து அனைவருக்கும் இலவச திட்டத்தின் கீழ் நமது மக்கள் தடுப்பு மருந்து பெறுவதை உறுதி செய்ய நம்பிக்கையுடன் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Source: Pm Modi Twiter

Image Courtesy:Bjp

Tags:    

Similar News