காஷ்மீர்: 3 பயங்கரவாதிகளை சுட்டுத்தள்ளிய இந்திய ராணுவம்!

ஜம்மு காஷ்மீர், டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Update: 2021-08-21 06:19 GMT

ஜம்மு காஷ்மீர், டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பயங்கரவதிகள் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் ராணுவத்தினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அங்கு ராணுவம் விரைந்தது.

அப்போது பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. அதில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் அடையாளங்களை ராணுவத்தினர் சேகரித்து வருகின்றனர்.

அதே போன்று நேற்று ஸ்ரீநகர் அருகே க்ரு பகுதியில் பொதுமக்கள் சிலரை கொன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

Source: Dinamalar

Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2827871

Tags:    

Similar News