ஹிஜாப் வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு: பெங்களூருவில் 144 தடை!

Update: 2022-03-15 03:58 GMT

ஹிஜாப் வழக்கில் இன்று கர்நாடக உயர்நீதிமன்றம் காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் மாநிலத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக பெங்களூரு மற்றும் மங்களூரு, கடலோர மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூருவில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமோ அதனை எல்லாம் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் ஆலோசனை நடத்தினார். இதில் பள்ளி, கல்லூரிகள் முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தார்.

மாநகரத்தில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று கமிஷனர் கறார் காட்டியுள்ளார். மேலும், பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு எப்படி வரும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Source: Daily Thanthi

Image Courtesy: Maruthubhumi English

Tags:    

Similar News