பாவம் அவர் கூட அவருக்கே ஓட்டுப்போட முடியல.. நகர்புற பஞ்சயத்து தேர்தலில், "ஜீரோ ஓட்டு" வாங்கிய காங்கிரஸ் வேட்பாளர் ஃபக்கீர் ஷபீர் பாபு! #ZeroVoteCongress

maharashtra Nagar Panchayat elections one Congress candidate named Fakir Shabber Babu

Update: 2022-01-21 06:06 GMT

மகாராஷ்டிரா மாநில நகர்புற பஞ்சயத்து தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஷிரூர் நகர் பஞ்சாயத்தில் போட்டியிட்ட  ஃபக்கீர் ஷபீர் பாபு ஒரு வாக்கு கூட பெறாமல், பூச்சிய வாக்குகளை பெற்று படுதோல்வி அடைந்தார். அதே பஞ்சாயத்தில் பாஜக வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்று, தனி பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்றார்.

மகாராஷ்டிரா நகர் பஞ்சாயத்துகளுக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 1,649 இடங்களில் 384 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) 344 இடங்களையும் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 316 இடங்களிலும், சிவசேனா 284 இடங்களிலும் வெற்றி பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

மாநிலத் தேர்தல் ஆணையம் (SEC) நவம்பர் மாதம் 106 நகர் பஞ்சாயத்துக்கான தேர்தல்களை அறிவித்தது மற்றும் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக - டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. டிசம்பர் 15 அன்று உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இரண்டு வெவ்வேறு கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன.

ஜீரோ ஓட்டு காங்கிரஸ்

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, காங்கிரஸ் வேட்பாளர் ஃபக்கீர் ஷபீர் பாபு ஒரு வாக்கு கூட பெறாத சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 72 வயதான ஃபக்கீர் ஷபீர் பாபு, ஷிரூர் நகர் பஞ்சாயத்துக்கு காங்கிரஸால் பரிந்துரைக்கப்பட்டார். ஷிரூர் நகர் பஞ்சாயத்து வார்டு எண் 6ல் ஃபக்கீர் போட்டியிட்டார். இந்த வார்டில் மொத்தம் 198 பேர் தங்கள் வாக்களித்தனர். இதில் பாஜகவின் கணேஷ் பண்டேகர் 155 வாக்குகள் பெற்று இந்த வார்டில் வெற்றி பெற்றார். அதன்பிறகு, என்சிபி வேட்பாளர் சாந்திலால் சோர்டியா 43 வாக்குகள் பெற்றார். இந்தப் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளராக ஃபக்கீர் ஷபீர் பாபு போட்டியிட்டார். ஆனால், அவர்களுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை. இந்த வார்டில் ஃபக்கீர் ஷபீர் பாபு வாக்களிக்கவில்லை. அதனால் அவரால் தனக்கு தானே கூட வாக்களிக்க முடியவில்லை. ஃபக்கீர் ஷபீர் பாபு கடந்த ஐம்பது ஆண்டுகளாக காங்கிரஸில் பணியாற்றி வருகிறார். ஃபகிர் ஷபீர் பாபு 1970களில் பீட் முன்னாள் எம்பி கேஷர் காகு க்ஷிர்சாகரின் செயல்பாட்டாளராகப் பணியாற்றி வருகிறார்.

பாஜக வெற்றி

பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர ஃபண்டாவிஸ் கூறுகையில், மாநிலத்தில் பாஜக மிக முக்கியமான அரசியல் கட்சியாக நீடிக்கிறது என்பதை முடிவுகள் காட்டுகின்றன. மாநிலத்தின் ஆளும் மகா விகாஸ் அகாடி (MVA) அரசாங்கம் தேர்தலின் போது "அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது" என்று குற்றம் சாட்டிய அவர், "காங்கிரஸ், என்சிபி மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் பிஜேபியை ஓரங்கட்டுவதற்கு எல்லாவற்றையும் செய்தன. அவர்கள் பணபலத்தை பயன்படுத்தி பாஜகவை தேர்தலில் வீழ்ந்த பார்த்தனர். ஆனால், பிஜேபி முன்னணி அரசியல் கட்சியாகத் தொடர்கிறது என்பதை முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன என்றார்.



Tags:    

Similar News