பிரதமர் வீட்டு வசதி திட்டம் - 2 லட்சத்திற்கு அதிகமான பயனாளர்களுக்கு பிரதமர் மோடி வழங்கும் வீடுகள்!

ரூபாய் 3400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 லட்சத்திற்கு அதிகமான வீடுகளை பயனாளர்களுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.

Update: 2022-12-19 01:49 GMT
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மிசோரம், மணிப்பூர், திரிபுரா அடுத்த ஆண்டில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தீவிர தேர்தல் பணிகளை தீவிரமாக பாரதிய ஜனதா கடந்த வாரமே தொடங்கிவிட்டது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மிசோரம் சென்று 1,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை மேகாலயா தலைநகருக்கு சென்றார். பிறகு அங்கு இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்தார். பின்னர் வடகிழக்கு கவுன்சில் பொன்விழா கூட்டத்தில் பங்கேற்ற சிறப்புரையாற்றினார்.

ரூபாய் 2,450 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார். இதில் மத்தியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வடகிழக்கு மாநிலம் முதலமைச்சர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ஹிமாச்சல் பிரதேசம் இடையே அமைக்கப்பட்டுள்ள சாலை மிசோரம், மணிப்பூர், திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24 உட்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அத்துடன் திரிபுரா சர்வீஸ் திரிபுரா செல்கிறார்.

பிரதமர் மோடி அங்கு பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3,400 கோடி செலவில் கட்டுப்பட்டுள்ள இரண்டு லட்சத்திற்கு அதிகமான வீடுகளை பயனாளிகளிடம் இன்று ஒப்படைத்தார். அகர்தலா புறவழிச்சாலை திறந்து வைத்தார். அந்த மாநிலத்தில் 230 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய சாலைகள் அமைத்தல், 540 கிலோ மீட்டர் தொலைவில் 112 சாலைகளை மேம்படுத்துதல் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
Input & Image courtesy: Maalaimalar
Tags:    

Similar News