பாடம் சொல்லிக்கொடுப்பதாக அங்கே பலமுறை தொட்டார்...மதரஸா மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதகுரு முகமது ஸ்வாலிஹ்!

Muslim cleric arrested for sexually abusing madrassa students

Update: 2022-02-17 11:20 GMT

கேரளாவில் ஒரு மதரஸாவில், மைனர் மாணவிகளை முஸ்லிம் மதகுரு ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ், குற்றவாளியான முகமது ஸ்வாலிஹ் கைது செய்யப்பட்டார். 

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வைப்பூர் ஊட்டுக்குளம் மசூதியில் இந்த சம்பவம் நடந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) தொண்டர்கள் மற்றும் உள்ளூர் தலைவர் லுபீர் தலைமையிலான  கும்பல், முகமது ஸ்வாலிஹ் கைது செய்யப்பட்டதை படம்பிடிக்க முயன்ற மக்களை தாக்கியது. முகமது ஸ்வாலிஹ் வைப்பூர் ஊட்டுக்குளம் மசூதியின் இமாமாகவும் உள்ளார். மதரஸாவில் பாடம் கற்பிக்கும்  பணியும் மேற்கொண்டு வருகிறார். 

அவரது மாணவிகளில் சிலர், தங்கள் மதரஸா ஆசிரியரின் நடத்தையில் பாலியல் மேலோட்டங்கள் உள்ளதாகவும், தேவையில்லாமல்  தொட்டதாகவும் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். 3 மாணவிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாகவும், அவர்கள் வெளிப்படுத்தியதன் அடிப்படையில் ஸ்வாலிஹ் கைது செய்யப்பட்டதாகவும் பெரும்பட்டி போலீசார் தெளிவுபடுத்தினர். அவர் மீது போக்சோ சட்டம் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) ஆர்வலர்கள், ஸ்வாலிஹ் 'கற்பிக்கும்' மதரஸாவில் இருந்து கைது செய்யப்படுவதைப் படம் பிடித்த ஒருவரைத் தாக்கினர். உள்ளூர் ஊடகங்கள் இந்த பிரச்சனையை குறைத்து மதிப்பிட்டன. 'மதச்சார்பற்ற' முக்கிய மலையாள ஊடகங்கள் இந்த சம்பவத்தை குறிப்பிடவில்லை. தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பெரும்பட்டி போலீசார் உறுதியளித்தனர். 

Tags:    

Similar News