கழிப்பறை டைல்ஸ்சில் இந்து தெய்வங்களின் படம் - இஸ்லாமிய கிராமத் தலைவர் அரங்கேற்றிய அட்டூழியம்!
உத்தரபிரதேச மாநிலம், சீதாபூரில் உள்ள இந்து தெய்வங்களை அவமதிக்கும் சம்பவம் நடந்துள்ளது. கழிப்பறையில் சிவலிங்கம், ஓம் சின்னம் மற்றும் இந்து சமயங்களில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் கலசத்தின் படங்கள் இருந்துள்ளது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது IPCயின் 295-A பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்து தெய்வங்களின் புனித உருவங்கள் மற்றும் சின்னங்களை கழிப்பறைகளில் வைக்கும் செயல் குறித்து அறிந்த இந்து சங்க ஆர்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அடாவடித்தனம் கிராமத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் மட்டும் நின்றுவிடவில்லை. பஜ்ரங் தள் ஆர்வலர்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு கழிப்பறையையும் திறக்கத் தொடங்கினர், பெரும்பாலான கழிவறைகளில் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் படங்களை கொண்ட டைல்ஸ் உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
திரேந்திர மிஸ்ரா என்பவர் கழிவறையின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டார், இது பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவியது. பாஜக தொண்டர், சீதாப்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட், டிஜிபி உட்பட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை ட்விட்டரில் டேக் செய்து, இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கழிவறைகளில் இந்து தெய்வங்களின் டைல்ஸ்களை வேண்டுமென்றே வைத்த கிராம தலைவர் மற்றும் செயலாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.
கிராமத்தின் கழிப்பறைகள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் தலைவரால் கட்டப்பட்டவை என்பதையும் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
எப்ஐஆரில், "கிராமத்தின் முஸ்லிம் சமூகத்தின் தலைவர் வேண்டுமென்றே இந்து சமுதாயத்தின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதான் ரேஷ்மா, அவரது கணவர் புனியாத் மற்றும் நசீமுல்லா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தவே எடுக்கப்பட்டுள்ளன" என்றார். குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், முக்கிய குற்றவாளியான ரேஷ்மா இன்னும் பிடிபடவில்லை.
Input From: HinduPost