இந்துக்களை கொலை செய்வோம்! பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா கேரளா பேரணியில் எச்சரிக்கை விடுத்த சிறுவன்!

Update: 2022-05-24 05:43 GMT

கேரளா மாநிலம், ஆலப்புலா மாவட்டத்தில் இஸ்லாமிய மத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பாக 'குடியரசை காப்போம்' என்கின்ற தலைப்பில் பேரணி நடத்தினர்.

இப்பேரணியில் பங்கேற்ற ஒருவர் தனது தோள் மீது ஒரு சிறுவனை சுமந்து வந்தார். அப்போது அந்த சிறுவன் மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் வெறுப்புணர்வை தூண்டுகின்ற வகையிலும் சில கோஷங்களை எழுப்பியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

அப்போது அந்த சிறுவன் எழுப்பிய கோஷத்தில் உங்களின் (இந்து மதத்தினர்) இறுதிச்சடங்கிற்கு அரிசி மற்றும் பூக்களை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். மேலும், உங்கள் (கிறிஸ்துவ மதத்தினர்) இறுதிச்சடங்கிற்காக ஊதுபத்திகளை வாங்கி வீடுகளில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் எமன் வந்துக்கொண்டிருக்கிறான். நீங்கள் அமைதியாக வாழ்ந்து வந்தால் உங்களை நாங்கள் அமைதியாக வாழ விடுவோம். நீங்கள் அப்படி இல்லையென்றால், உங்களுக்கு எவ்வாறு மரணம் கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்று எச்சரிக்கை விடுத்த சிறுவனால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அச்சிறுவனுக்கு யார் இப்படி பேச சொல்லிக்கொடுத்தது என்கின்ற அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Source,Image Courtesy Daily Thanthi


Tags:    

Similar News